நாகப்பட்டினம்

தரங்கம்பாடி பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா

DIN

பொறையாறு அருகேயுள்ள தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சைமன் மகிபாலன் தலைமை வகித்தார்.  மறைமாவட்டத் தலைவர் பாஸ்டர் நவராஜ் ஆபிரகாம் முன்னிலை வகித்து, கிறிஸ்து பிறப்பு குறித்துப் பேசினார்.  டி.பி.எம்.எல். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.  கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில்  மாணவர்கள்  பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.  
இதில்,  தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் கஸ்தூரிபாய் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT