நாகப்பட்டினம்

மினி லாரி மோதி இளைஞர் சாவு

DIN

நாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறையை அடுத்துள்ள மூங்கில் தோட்டம் கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்த ரவி மகன் ரமேஷ் (22). ரயிலடி தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மாதவன் (26). இவர்கள் இருவரும் செம்பனார்கோயில் பகுதியிலிருந்து மூங்கில் தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். ஆறுபாதி அடுத்துள்ள மேட்டிருப்பு பகுதியில் எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில், ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மாதவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT