நாகை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மாற்றுமுறை எரிசக்தி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சிவகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் கே. சுவாமிநாதன் வரவேற்றார்.
லான்கோ இன்டஸ்ட்ரீஸ் தலைமை மேலாளர் செல்வமணி, முதுநிலை மேலாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் வீட்டு மின் உபயோகப் பொருள்களை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்றும் மாற்றுமுறை எரிசக்தி அவசியம் குறித்தும் திரைக் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. தேசிய மாணவர் படை அலுவலர் பிரபு டேவிட் சாமுவேல் நன்றி தெரிவித்தார்.