நாகப்பட்டினம்

தொழிற்சங்கத் தலைவர் சுகுமால் சென் மறைவுக்கு அஞ்சலி

DIN

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அமைப்புத் தலைவர்களில் ஒருவரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான சுகுமால் சென் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் நிகழ்ச்சி, நாகை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல், மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், சுகுமால் சென் மேற்கொண்ட தொழிற்சங்கப் பணிகளை நினைவுக்கூர்ந்து பேசினார். இதைத் தொடர்ந்து, சுகுமால் சென் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பா. ராணி,  நாகை வட்டத் தலைவர் சி. பாலசுப்பிரமணியன், வட்டச் செயலாளர் எம். தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள், சார்பு தொழிற்சங்க அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT