நாகப்பட்டினம்

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு

DIN

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதி கடலில் நண்பர்களுடன் புதன்கிழமை குளித்த கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை கால்டாக்ஸி பகுதியில் வசித்து வரும் தெய்வசிகாமணியின் மகன் பூர்ணசந்திரன் (18). இவர், மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் புதன்கிழமை காலை தனது நண்பர்கள் இருவருடன் தரங்கம்பாடி கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாணவரின் சடலத்தை மீட்டு, கடலோர காவல்துறை மற்றும் பொறையாறு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பொறையாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT