வேதாரண்யத்தில் காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வேதாரண்யம் காவல் ஆய்வாளர் நடராஜன் தொடங்கி வைத்து, சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கிப் பேசினார். காவல் உதவி ஆய்வாளர் ஜயேந்திரசரஸ்வதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சிகரம் கலைக் குழுவினர் சாலைப் பாதுகாப்பை மையப்படுத்தி பாடல்கள், நாடகங்கள் நிகழ்த்தினர்.
இதேபோன்று, வேதாரண்யம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.