உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி
குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மே 16-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணையில் பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில் புறப்பட்ட உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை பூம்புகார் செல்லும் வழியில் குத்தாலம் வந்தது. பேரணியில் கோரிக்கையை வலியுறுத்தி சென்றனர்.
இதில், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க. வரதராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கோவி. சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில்பாலு, மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.