நாகப்பட்டினம்

சீர்காழி அருகே வீடு தீக்கிரை

DIN

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரத்தில், வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.50 ஆயிரம் ரொக்கம், தங்க நகைகள் எரிந்து புதன்கிழமை நாசமாகின.
ஆச்சாள்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (60). தொழிலாளி. இவரது வீட்டின் மேற்கூரையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த சீர்காழி தீயணைப்புப் படையினர், தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 7 பவுன் நகைகள் எரிந்து சாம்பாலாகின. அத்துடன், வீட்டின் கிரயப்பத்திரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் நாசமாகின. 
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் மற்றும் பொருள்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT