நாகப்பட்டினம்

வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

DIN

வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரி மற்றும் ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ருக்மணி வரதராஜன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஆர்.வரதராஜன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். வேதாரண்யம் வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராஜா வீரையன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர்  தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு மற்றும் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ள தொழில்நுட்பத்தை கையாள்வது குறித்து விளக்கினர். 
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் ஆர்.வி. செந்தில், பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலமுருகன், பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் யோகானந்த், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பக்கிரிசாமி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன் வரவேற்றார். நிறைவில் நடராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT