எரியோடு துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமணார்கோட்டை, குளத்தூர், கொசவப்பட்டி, சூடாமணிபட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, எரியோடு துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளர் ஆ. சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.