நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் முதியவர் கைது

DIN

சீர்காழி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தில் முதியவரை மகளிர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சீர்காழி அருகேயுள்ள தென்னலக்குடியைச் சேர்ந்தவர் தொழிலாளி கணேசன்(60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும்,  தான் கர்ப்பம் அடைந்தது தெரியாமல்  வழக்கம்போல் தனது அன்றாட பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் பெற்றோருக்கும் மகள் கர்ப்பிணியானது தெரியவில்லையென்றும், மாறாக வயிற்றில் ஏதோ கட்டி இருப்பதாக நினைத்துக்கொண்டு  இருந்தனராம். இதற்கிடையில், அந்த மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் வயிற்றுவலி  ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை  சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதில், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் மாணவியின் நிலைமைக்கு கணேசன் தான் காரணம் என்பது  தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவி சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கணேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT