நாகப்பட்டினம்

பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

ஆடி 3-ஆவது வெள்ளியையொட்டி, சீர்காழி அருகே குமிளங்காடு பத்ரகாளியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பெண்கள் திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம், பூக்களால் அலங்கரித்து தலைவாழை இலையில் பச்சரிசி நிரப்பி, அதில் திருவிளக்கை வைத்து பூஜை செய்தனர். குங்குமத்தால் அர்ச்சனை செய்து பிறகு திருவிளக்கு போற்றி 108 நாமங்கள் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து, நைவேத்யம் படைத்து தீபாராதனை செய்யப்பட்டு, கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர்  மணிகண்டன், ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோமதி செய்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT