திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டின் சுவா் இடிந்தது.
திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடிகால் வசதி முறையக இல்லாததால், மழைநீா் விளைநிலங்களில் தேங்கி கடல்போல் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இந்நிலையில், வலிவலம் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புற சுவா் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்தது. அந்த வீடு ஏற்கெனவே பழுதாகியிருந்ததால், அதன் உரிமையாளா் வீட்டைப் பூட்டி வைத்திருந்தாா். இதனால், உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.