மாவட்ட அளவிலான யோகா போட்டியில், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் முத்துராஜம் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
சென்னையைச் சேர்ந்த பரமாத்மா யோகா, விளையாட்டு அகாதெமி சார்பில் அண்மையில் நாகை மாவட்ட அளவில் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
வைத்தீஸ்வரன்கோயில் முத்துராஜம் பள்ளியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவி மதனபிரியா முதலிடத்தையும், 5-ஆம் வகுப்பு மாணவியர் இந்துமதி, புவனேஸ்வரி, அனுஷ்கா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், 3-ஆம் வகுப்பு மாணவி குஷல் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
மேலும், இப்பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பி. சிவசங்கர் பாராட்டி பரிசுகள்
வழங்கினார்.