நாகப்பட்டினம்

யோகா போட்டி:  வைத்தீஸ்வரன்கோயில் மாணவர்கள் சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான யோகா போட்டியில், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் முத்துராஜம் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
சென்னையைச் சேர்ந்த பரமாத்மா யோகா, விளையாட்டு அகாதெமி சார்பில் அண்மையில் நாகை மாவட்ட அளவில் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர்.
வைத்தீஸ்வரன்கோயில் முத்துராஜம் பள்ளியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவி மதனபிரியா முதலிடத்தையும், 5-ஆம் வகுப்பு மாணவியர் இந்துமதி, புவனேஸ்வரி, அனுஷ்கா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், 3-ஆம் வகுப்பு மாணவி குஷல் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
மேலும், இப்பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பி. சிவசங்கர் பாராட்டி பரிசுகள்
வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT