நாகப்பட்டினம்

சாலையோரத்தில் 3 கிலோ தங்கக் கட்டிகள்; காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை

நாகை மாவட்டம், பொறையாறு அருகே சாலையோரத்தில் கிடந்த 3 கிலோ தங்கக் கட்டிகளை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

DIN

நாகை மாவட்டம், பொறையாறு அருகே சாலையோரத்தில் கிடந்த 3 கிலோ தங்கக் கட்டிகளை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
புத்தாண்டு தினத்தையொட்டி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், பொறையாறு அருகே உள்ள நண்டலாறு சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரசுப் பேருந்தில் வந்த மர்ம நபர், காவல் துறையினரைக் கண்டவுடன், தான்வைத்திருந்த தங்கக் கட்டிகளை  நண்டலாறு சாலையோரத்தில் உள்ள முட்புதரில் வீசினாராம்.
இதையறிந்த சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் மற்றும் போலீஸார், நண்டலாறு சோதனைச் சாவடி பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பையில் மொத்தம் 3 கிலோ எடையிலான 26 தங்கக் கட்டிகள் முட்புதருக்குள் கிடப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT