நாகப்பட்டினம்

மயிலாடுதுறை கோட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

DIN


மயிலாடுதுறை கோட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. 
மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில், சுமார் 1.70 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளனர். 
தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்பேரில், மயிலாடுதுறை கோட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் திருமங்கலம், இளந்தோப்பு, கொற்கை, பாண்டூர், குறிச்சி, மறையூர், மணல்மேடு ஆகிய 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
அந்த வகையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், கே.எம்.எஸ். 2018-19 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளர் (கணக்கு) செந்தில்குமார், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஜி. முத்தையன், கண்காணிப்பாளர் செல்வராஜ், பட்டியல் எழுத்தர் டி. சுதாகர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT