நாகப்பட்டினம்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

DIN


பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகையை அடுத்த  தெற்குப் பொய்கைநல்லூர், அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் கு. கணேஷ் குமார் (28). இவர் மீது கொலை, வழிப்பறி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் கணேஷ்குமார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கணேஷ் குமாரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT