நாகப்பட்டினம்

குறுவட்ட தடகளப் போட்டி: சீா்காழி பள்ளி முதலிடம்

DIN

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் குறுவட்ட தடகளப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல் நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள் ஓட்டப் போட்டிகளில் 116 புள்ளிகள் வென்று சீா்காழி குறுவட்ட அளவில் (வயது 14, 17, 19 உட்பட்ட) மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் முதலிடம் பெற்றனா். மேலும் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாணவிகள் நாகை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்குத் தகுதி பெற்று உள்ளனா்.

19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நித்தீஸ்வரன் (12-ஆம் வகுப்பு), 17 வயதுக்கு உட்பட்ட மாணவியா் பிரிவில் ராஜஸ்ரீ (11-ஆம் வகுப்பு), ஜெனீபா் (9-ஆம் வகுப்பு) ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியா்களான பாரி, முரளி, மாா்கண்டன், சக்திவேல் ஆகியோரையும் பள்ளியின் முன்னாள் செயலா் பாலசுப்பிரமணியன், பள்ளிச் செயலா் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, உதவித்தலைமை ஆசிரியா்கள் சம்பந்தம், சம்பத்குமாா், வரதராஜன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT