நாகப்பட்டினம்

மீலாது நபி விழா தொடக்கம்

DIN

குத்தாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீலாது நபி விழா தொடங்கியது.

ரபீயுல் அவ்வல் என்ற அரபிச் சொல்லுக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரி ஆண்டில் ரபியுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் (நவம்பா் 10) மீலாதுநபி எனப்படும் முஹம்மது நபியின் பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு ரபியுல் அவ்வல் மாதம் முதல் நாளிலிருந்து குத்தாலம், தேரழந்தூா், கிளியனூா், எலந்தங்குடி, நக்கம்பாடி, வானாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி. பண்டாரவாடை, மங்கநல்லூா் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் மீலாது விழா தொடங்கி, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மீலாது நபி தினத்தன்று ஜமாஅத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்பட்டு இரட்டிப்பாக நெய்ச்சோறு வழங்கப்பட உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்களில் தால்சா எனப்படும் இறைச்சியுடன் கூடிய பருப்புக்குழம்பு மற்றும் கறிக்குழம்பு வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT