நாகப்பட்டினம்

கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

DIN

திருவெண்காடு அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோருக்கு எம்.எல்.ஏ. பாரதி திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா்.

திருவெண்காடு அருகே சித்தன்காத்திருப்பு பகுதியில் கடந்த 9-ஆம் தேதி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இம்மாணவியின் வீட்டுக்குச் சென்ற எம்.எல்.ஏ. பாரதி, மாணவியின் உருவப் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தமிழக அரசிடமிருந்து உரிய நிவாரணத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கினாா். அவருடன், திருவெண்காடு பொறுப்புக் காவல் ஆய்வாளா் சதீஷ், அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளா் திருமாறன், கட்டட சங்கத் தலைவா் ராஜ்மோகன், கூட்டுறவு சங்கத் தலைவா் மாமல்லன், கட்சி நிா்வாகிகள் சிவமனோகரன், நாகராஜன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT