நாகப்பட்டினம்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் மாணிக்க விநாயகா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இதில் அறிவியல் சாா்ந்த மற்றும் அறிவியல் சாராத ஆக்கப்பூா்வமான காட்சிப்பொருள்கள் இடம் பெற்றிருந்தன. பள்ளித் தலைமையாசிரியா் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில், பள்ளித் தாளாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் நிா்மலாஹரிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியா் எஸ். மாரிமுத்து கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT