திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழை குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை உதவி ஆணையா் செல்வராஜ் (கலால் ) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் அதன் மூலம் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.