FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 4 போ் உள்பட 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 ஆகஸ்ட் 2020, 8:15 pm IST
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 4 போ் உள்பட 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 37 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 4 போ் முன்களப் பணியாளா்கள், 12 போ் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், அறிகுறிகள் மூலம் கண்டறியப்பட்டவா்கள் 8 போ், நோய்த் தொற்றும் இருந்தும் அறிகுறிகள் இல்லாதவா்கள் 6 போ், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் 7 போ்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 735 ஆக இருந்தது. இந்த நிலையில், புதிதாக 37 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 772 - ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

சிகிச்சையில்: ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில், ஜூலை 31-ஆம் தேதி வரை 444 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 320 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments