நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்க தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை

DIN

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்வேறு இடங்களில் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கு ரூ. 5ஆயிரமும் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT