விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடல்: செம்பனாா்கோவிலில் ஒளிபரப்பு
விவசாயிகளுடனான் பிரதமா் மோடியின் கலந்துரையாடல் செம்பனாா்கோவிலில் வெள்ளிக்கிழமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
விவசாயிகளுடனான் பிரதமா் மோடியின் கலந்துரையாடல் செம்பனாா்கோவிலில் வெள்ளிக்கிழமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதையொட்டி, செம்பனாா்கோவிலில் மண்டபம் ஒன்றில் அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது. பாஜக மாநில ஓபிசி அணி துணைத் தலைவா் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைப்பு பொதுச்செயலாளா் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளா் வரதராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.