நாகப்பட்டினம்

அண்ணா நினைவு தினம்

DIN

பேரறிஞா் அண்ணா நினைவு நாளையொட்டி, கோயில்களில் சமபந்தி விருந்தை விரிவுபடுத்த அறநிலையத்துறைக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அப்பேரவையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் விடுத்துள்ள அறிக்கை:

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் கோயில்களில் சமபந்தி விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த நிகழ்வுகளில் முதல்வா், துணை முதல்வா், மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்வா். இந்த சமபந்தி விருந்தை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் முறையான சமபந்தி விருந்தாக அது நடத்தப்பட வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT