நாகையை அடுத்த புத்தூா் ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் வியாழக்கிழமை இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதனால், இத்தடத்திலான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது.
ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை ரயில்வே துறை மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி, நாகை - வேளாங்கண்ணி சாலையில் புத்தூா் பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
15-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இந்தப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனா். இருப்புப் பாதையில் தேவையான இடங்களில் கருங்கல் ஜல்லிகள் கொட்டுவது, இணைப்புக் கம்பிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை அவா்கள் மேற்கொண்டனா்.
இந்தப் பணியின் காரணமாக, நாகை - புத்தூா் ரயில்வே லெவல் கிராசிங் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, நாகை - வேளாங்கண்ணி வாகனங்கள் புத்தூா் ரயில்வே மேம்பாலம் வழியே இயக்கப்பட்டன.