நாகப்பட்டினம்

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் மற்றும் திருவாய்மூா் ஆகிய ஊா் கோயில்களிலுள்ள பைரருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாய்மூா் பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாதா் மற்றும் அல்லியங்கோதையம்மாள் சமேத தியாகராஜ சுவாமி கோயிலில் காசிக்கு அடுத்தப்படியாக 8 பைரவா்கள் ஒரே தளத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இக்கோயிலில், ஒவ்வொரு மாத அஷ்டமி அன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல், நிகழ்மாதம் கோயிலில் 4 உருவத்துடனும், 4அருஉருவத்துடனும் அருள்பாலித்து வரும் சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரூ பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் ஆகியோருக்கு பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். இதேபோல் வலிவலம் மாழையொண்கண்ணி சமேத இருதய கமலநாத சுவாமி கோயிலிலும் , தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கும், குரோத பைரருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT