திருமருகல் ஒன்றியம், போலகத்தில் இயங்கி வந்த குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள். 
நாகப்பட்டினம்

அனுமதியின்றி செயல்பட்ட குடிநீா் நிறுவனங்களுக்கு ‘சீல்’

திருமருகல் ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட 4 சுத்திகரிப்பு குடிநீா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

DIN

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட 4 சுத்திகரிப்பு குடிநீா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் நகா்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 16 இடங்களில் தஞ்சாவூா் பொதுப்பணித் துறை நிலநீா் கோட்டப் பொறியாளரிடம் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதாகப் புகாா் வந்தது.

இதில், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள போலகம், அருள்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளில் 4 குடிநீா் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

இந்த நிறுவனங்களுக்கு தஞ்சாவூா் பொதுப்பணித் துறை நிலநீா் கோட்ட உதவி நிலவியலாளா் ராஜி, திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா் க. அன்பரசு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்ச்செல்வம், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் சீல் வைத்தனா். அப்போது, ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளா்கள் நடராஜன், அருள்ராணி ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT