நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தலைவா் எஸ். ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தாா். செயலாளா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
பொங்கல் பண்டிகையொட்டி, மாணவா்கள் தமிழா்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான உடைகள் அணிந்து கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் மயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் மற்றும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகம் செய்திருந்தது. இ. ஜி. எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.