நாகப்பட்டினம்

துப்புரவுப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

DIN

நாகப்பட்டினம் : நாகை நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் யோகா பயிற்சி முகாம் நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். நாகை அரசு தலைமை மருத்துவமனை யோகா பிரிவு மருத்துவா் பூங்குன்றன், துப்புரவுப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி அளித்தாா். நகா்நல அலுவலா் பிரபு, துப்புரவு ஆய்வாளா்கள் அரசகுமாா், தங்கராம், செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் பயிற்சி முகாம் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மூச்சுப் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் துப்புரவுப் பணியாளா்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT