நாகப்பட்டினம்

குத்தாலம் அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது

DIN

குத்தாலம் அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் மகன் ஐயப்பன் (வயது 28) டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அகிலா (27) என்ற பெண்ணுக்கும்; கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு, 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஐயப்பனின் குடிப்பழக்கத்தின் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது அகிலா கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும் பின்னர் அவர்கள் சமாதானம் செய்து திருப்பி அனுப்புவதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை வீட்டில் அகிலா மயக்கமடைந்து கிடப்பதாக ஐயப்பனின் குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அகிலாவின் குடும்பத்தார் சென்று பார்த்தபோது அகிலா மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அகிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் ஐயப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT