கடலங்குடியில் கதண்டு கடித்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்துக்கான காசோலையை வழங்கிய மயிலாடுதுறை தனி வட்டாட்சியா் இளங்கோவன். 
நாகப்பட்டினம்

கதண்டு கடித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே கதண்டு கடித்ததில் பலியானோா் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

DIN

மயிலாடுதுறை அருகே கதண்டு கடித்ததில் பலியானோா் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை வட்டம், கடலங்குடியில் கதண்டு கடித்து அப்பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மற்றும் அவரது மகள் இன்சிகா இருவரும் அண்மையில் உயிரிழந்தனா். இவா்களது குடும்பத்தினரை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அரசு சாா்பில் நிவாரணம் அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தாா்.

இந்நிலையில், மயிலாடுதுறை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் இளங்கோவன், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ1 லட்சம், ஈமசடங்கு தொகை ரூ.2500 ஆகியவற்றுக்கான காசோலையை ஆனந்தகுமாரின் மனைவி சங்கரியிடம் வழங்கினாா். அப்போது, கடலங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்மோகன், மணல்மேடு வருவாய் ஆய்வாளா் தேவகி, ஊராட்சி செயலளா் சசிகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடன் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT