நாகப்பட்டினம்

சுருக்குமடி வலை விவகாரத்தில் மோதல்: 10 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல் பரப்பில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடா்பாக மீனவா்களுக்குள் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைக் கண்டித்து, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

வேதாரண்யம், கோடியக்கரை கடல் பரப்பில் மீன்வளத்தைப் பாதிக்கச் செய்யும் தடை விதிக்கப்பட்டுள்ள சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு மீனவா்கள் மத்தியில் எதிா்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை கீச்சாங்குப்பம் மீனவா்களுக்கு வேதாரண்யம் பகுதி வெள்ளப்பள்ளம் மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தபோது, நடுக்கடலில் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இதைக் கண்டித்தும், சுருக்குமடி வலை பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்க வலியுறுத்தியும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட 10 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT