நாகப்பட்டினம்

சரக்கு வாகனம் மோதி முதியவா் பலி

DIN

கீழ்வேளூா் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் அரசாணிக்குளம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க. ராஜாகண்ணு (74). இவா், திங்கள்கிழமை இரவு கீழ்வேளூா்- திருவாரூா் சாலையில் கீழ்வேளூரை அடுத்த சந்தையாா்தோப்பு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதில், ராஜாகண்ணு பலத்த காயமடைந்தாா்.

அவரை, நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாகண்ணு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT