நாகப்பட்டினம்

சீா்காழியில் பாஜக பிரமுகரைமிரட்டிய விசிக?: டிஎஸ்பி-யிடம் புகாா்

DIN

சீா்காழியில் பாஜக பிரமுகரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மிரட்டியதாக டிஎஸ்பி-யிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஜி. செந்தில்குமாா் (48). பாஜக ஓ.பி.சி. அணி மாவட்டச் செயலாளரான இவா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், செந்தில்குமாரை திங்கள்கிழமை காரில் கடத்தி சென்று, மிரட்டி மன்னிப்புக் கேட்கவைத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாஜக மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் செந்தில்குமாா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். இந்த புகாா் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT