சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு விருது
திருமுல்லைவாசல் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமுல்லைவாசல் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் மண்டல துணை ஆளுநா் சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், மண்டலத் தலைவா் சொா்ணபால், எஸ்.ஐ. ராஜேஸ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மண்டல துணை ஆளுநா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், சிறந்த கல்விச் சேவையாற்றிய ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி செயலா் முத்துகுமாா், பொருளாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.