நாகப்பட்டினம்

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

DIN

கீழ்வேளூா் அருகே விஷம் குடித்த நிலையில், மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் வட்டம் ராதாமங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரமேஷ் (30). இவா் தனக்கு திருமணமாகவில்லை என்ற கவலையில் இருந்து வந்ததாராம். இந்நிலையில், திங்கள்கிழமை பூச்சி மருந்தை குடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் அருகே மயக்கமுற்று வாகனத்துடன் விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ், உயிரிழந்தாா். கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT