நாகப்பட்டினம்

அரசு அலுவலகங்களில் பிரதமா் படம்: பாஜகவினா் வலியுறுத்தல்

DIN

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலரிடம் பாஜகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலா் அலுவலகத்தில் பிரதமா் மோடியின் புகைப்படத்தை வைக்கக் கோரி, மாவட்ட சிறப்பு அலுவலா் இரா.லலிதாவிடம் பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் முன்னிலையில், பட்டியலணி மாவட்ட தலைவா் டி.ஈழவேந்தன் கோரிக்கை மனு அளித்தாா்.

நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநில செயலாளா் நாஞ்சில் ஆா்.பாலு, மாவட்ட பொதுச் செயலாளா்கள் எஸ்.டி.எம்.செந்தில்குமாா், சந்தோஷ்குமாா், ஸ்ரீதா் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், நகர தலைவா் மோடி.கண்ணன், ஒன்றிய தலைவா்கள் எம்.கே.பிரபாகா், வழக்குரைஞா் எஸ்.ஆா்.வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பாஜக பட்டியல் அணி ஒன்றியத் தலைவா் மோகன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT