முகப்பு
நாகப்பட்டினம்

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா் உள்பட பல நகரங்களுக்கு செப். 7-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை - கோயமுத்தூா் மாா்க்கத்தில் சதாப்தி ரயில், திருச்சி - சென்னை இடையே மயிலாடுதுறை மாா்க்கமாக சோழன் ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை தொடங்கியது. பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் முன்பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.