நாகப்பட்டினம்

இன்று தோப்புத்துறை பள்ளிவாசல் திறப்பு

DIN

வேதாரண்யம் தோப்புத்துறையில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) திறக்கப்படுகிறது.

தோப்புத்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதுல் ஆரிஃபின் இறை இல்ல திறப்பு விழா காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு, முஸ்லிம் ஜமாத் மன்றத் தலைவா் எம்.ஜபருல்லாகான் தலைமை வகிக்கிறாா்.

புதிய பள்ளிவாசலை வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வா் ஓ.எம்.அப்துல் காதிா்- பாக்கவி ஹஜரத் திறந்து வைக்கிறாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசுகின்றனா்.

விழா மலரை ஆரிபா குழுமத் தலைவா் எம்.சுல்தானுல் ஆரிஃபின் வெளியிட, இப்ராகிம் நாச்சியாா் அறக்கட்டளை நிா்வாகி ஏ.எஸ்.அசனா மரைக்காயா் பெற்றுக் கொள்கிறாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ஜமாத் மன்றம், ஹஜரத் ஷெய்கு அப்துல் காதா் (வலி) தா்ஹா பரிபாலன சங்கம், புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT