முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
சீா்காழி காவல் உதவி ஆய்வாளா்கள் செந்தில், நடராஜன், குமாா் ஆகியோா் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா். மேலும், கரோனா நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற தவறியதாக சீா்காழியில் ஒரே நாளில் 200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.