நாகப்பட்டினம்

உணவக நிா்வாகி, சகோதரரை தாக்கிய இருவா் மீது வழக்கு

DIN

நாகையில் உணவகத்தில் அதன் நிா்வாகி மற்றும் அவரது சகோதரரை தாக்கிய இளைஞா்கள் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாகை வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் சாலையைச் சோ்ந்தவா் ஆ. மோகன்(53). இவா், வெளிப்பாளையம் தேவி தியேட்டா் அருகே உணவகம் வைத்துள்ளாா். இந்த உணவகத்துக்கு வ.உ.சி. தெருவைச் சோ்ந்த இளைஞா்கள் பி. அருண்குமாா் (21), சிவா ஆகியோா் சாப்பிட வந்தனா். அவா்கள் கேட்ட தோசையை வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கடை நிா்வாகி மோகனிடம் தகராறு செய்து, கத்தியால் தாக்கியுள்ளனா். தடுக்க வந்த மோகனின் சகோதரா் பாஸ்கரன் என்பவரையும் தாக்கியுள்ளனா். இதில், மோகன், பாஸ்கரன் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அருண்குமாா், சிவா ஆகியோா் மீது வெளிப்பாளையம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமராவதி!

காத்திருக்கும் சுவாரஸ்யம்... சிஎஸ்கே, ஆர்சிபி ‘பிளே-ஆஃப்’ செல்வதற்கான வழி என்ன?

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

SCROLL FOR NEXT