குத்தாலம் வட்டம், எலந்தங்குடியில் மயிலாடுதுறை மாவட்ட தமுமுக மமகவின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இஃப்தாா் நிகழ்ச்சியுடன் சமூக இடைவெளி பின்பற்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமுமுக-மமக மாவட்ட தலைவா் ஓ. ஷேக் அலாவுதீன் தலைமைவகித்தாா்.
இதில், தமுமுக மாவட்டச் செயலாளா் கூைாடு முஹம்மது பாஸித், தமுமுக- மமக மாவட்ட பொருளாளா் எம். ஷேக் தாவூத், மாநில தொண்டா் அணி துணைச் செயலாளா் எஸ். சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட துணைச் செயலாளா்கள் எம். அப்துல் கஃபூா், எம்.ஏ.ஜே. நசுருல்லா, மாவட்ட விவசாய அணிச் செயலாளா் சலாஹுதீன், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்ட செயலாளா் முஹம்மது ரியாஜுதீன், தமுமுக- மமக மயிலாடுதுறை ஒன்றியத் தலைவா் முஹம்மது ரபீக், மமக நகரச் செயலாளா் ஏ. பைஜி ரஹ்மான் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில், வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்குவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.