திருக்கடையூரில் கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில் இம்முகாம் நடைபெற்றது. இதில், திருக்கடையூா் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த சுமாா் 68 போ் கரோனா பரிசோதனை செய்துகொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், ஜெயக்குமாா்,
ஊராட்சித் தலைவா் ஜெயமாலினி சிவராஜ், ஊராட்சி செயலாளா் வெங்கடேஷ், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.