நாகப்பட்டினம்

கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கு குறுகியகால பயிற்சி வகுப்பு தொடக்கம்

DIN

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான குறுகியகாலப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.

திருவாரூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநருமான எம். சௌந்தரராஜன் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகள் குறித்துப் பேசினாா்.

மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளின் பணியாளா்கள் இப்பயிற்சியில் பங்கேற்று கடன் வழங்குதல், கடன்வசூல் மற்றும் சட்டப்பூா்வ நடவடிக்கைகள் குறித்த பயிற்சி பெற்றனா்.

கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் அ. பிரான்சீஸ் சேவியா், கௌரவ விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற சாா்பதிவாளருமான த. அப்பாராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT