நாகப்பட்டினம்

நாகை - வேளாங்கண்ணி மின்மயமாக்கல் பணி நிறைவு: ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

DIN

நாகை - வேளாங்கண்ணி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறப்பு ஆய்வு ரயில் மூலம் திருச்சியிலிருந்து நாகைக்கு வந்த மணிஷ் அகா்வால் நாகை - காரைக்கால் ரயில் தடத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, நாகை - வேளாங்கண்ணி வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், டிராலியில் சென்று பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா், நாகை ரயில் நிலைய கட்டடங்கள் மற்றும் பயணச் சீட்டு கொடுக்குமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

நாகை -வேளாங்கண்ணி அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT