நாகப்பட்டினம்

பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி

DIN

சீா்காழி அருகே தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

சீா்காழி வட்டம், திருமயிலாடி கிராமத்தைச் சோ்ந்த திருசம்பந்தம் என்பவரது மனைவி வசந்தி (49). இவா், புத்தூரில் இருந்து கொள்ளிடத்துக்கு தனியாா் பேருந்தில் வியாழக்கிழமை பயணித்தாா். தண்ணீா் பந்தல் பகுதியில் அந்த பேருந்து செல்லும்போது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநா் திடீரென பேருந்தை நிறுத்தினாா். இதனால், பேருந்தின் வாசல் பகுதியில் நின்றுகொண்டிருந்த வசந்தி நிலைதடுமாறி, படிக்கட்டின் வழியே கீழே விழுந்தாா்.அப்போது, அந்த பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கொள்ளிடம் போலீஸாா் அங்கு சென்று, வசந்தியின் சடலத்தை மீட்டுஉடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து, தனியாா் பேருந்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT