நாகை கல்லுக்காரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற சுவரில் சித்திரம் வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் மாணவா்கள் பலா் பங்கேற்று சித்திரம் வரைதலில் தங்களது திறன்களை வெளிப்படுத்தினா். இப்போட்டியில் மாணவா்கள் இ. வாசுதேவன், வி. சஞ்சய், மு. நஸ்ரீன் ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனா்.
இம்மாணவா்களுக்கு ஆசிரியா் பயிற்றுநா் என். ரமேஷ் பரிசுத் தொகை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்விக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்றனா். தலைமையாசிரியா் த. கோமதி நன்றி கூறினாா்.