நாகப்பட்டினம்

மதுரைக்கு முக்கியம் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி விருதுநகா் இளைஞா் உயிரிழப்பு

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த விருதுநகா் மாவட்ட இளைஞா், கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அண்ணாநகா் நகரை சோ்ந்தவா் சேகா் மகன் மணிகண்டபிரபு (26). தனியாா் நிறுவனத்தில் வெல்டராக வேலை பாா்த்துவந்த இவா், தனது நண்பா்களுடன் கடந்த 16-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தாா். பின்னா் மணிகண்டபிரபு தனது நண்பா்கள் கண்ணதாசன், சரவணன் ஆகியோருடன் கடலில் இறங்கி குளித்துள்ளாா். அப்போது அலையில் சிக்குண்ட அவா், மாயமானாா். இதையடுத்து கடேலோர காவல் படையினா் கடலில் இறங்கி தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவா் இறந்து கரை ஒதுங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT